வறுமை ஒழிக்கப்பட்டதா? வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டதா? இந்தியாவிலுள்ள சட்டங்கள் அனைத்தும் மக்களின் கண்களை மறைக்க இயற்றப்படுகின்றதே தவிர, அவர்களின் துயர் துடைக்க இயற்றப்படுவதாக இல்லையென்பது இந்திய அரசியலமைப்பு சட்டங்களில் எழுதப்படாத/இயற்றப்படா உவமை. பண்டைய காலம் தொட்டு இன்றளவும் வறுமை, பொருளாதார வளர்ச்சியின்னமை காரணங்களினால் சிறுபிஞ்சு மடல்களை பணியில் அமர்த்துவதை களைய 1986ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் குழந்தை தொழிலாளர்கள் தடுப்புச்சட்டம். 2006 மற்றும் 2008ல் இச்சட்டம் திருத்தி எழுதப்பட்டது. இந்தியாவிலுள்ள மொத்த மக்கள்தொகையில் ஒவ்வொரு 11வது(CRY 2011 அறிக்கைப்படி) குழந்தையும் வேலை செய்கிறது. 80% குழந்தைகள் ஊரகப் பகுதியில் வேலை செய்கின்றனர்(CRY 2011 அறிக்கைப்படி).பள்ளி செல்லாத ஒவ்வொரு குழந்தையும் குழந்தை தொழிலாளர் என வரையறை செய்து வாதிடுகிறது ஓர் சில அமைப்புகள். கிராமப்புறங்களில் போதிய ஆசிரியர் மற்றும் பள்ளிகளின் கட்டமைப்பு இல்லையென்பதே காரணம்யென யுனிசெப் கூறுகிறது. கல்வியறிவை மேம்படுத்தும் பொருட்டு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளும் திறமையற்ற அரசு ஊழியர்களினால் தோல்வியைத் தழுவின...