வெண்பா 11. கலவியுணர்வு வணக்கம் அன்பர்களே. எனது வெண்பாவை தொடர்ந்து வாசிப்போருக்கு எனது சிந்தனையின் அறிவை அன்பாக உரித்தாக்கிக் கொள்கிறேன். வாழ்க்கை எப்போதும் எதாவதொரு வகையில் இன்பத்தை அனுபவித்து நடை பயணம் மேற்கொள்ளத்தான் செய்கிறது. நம்மிடமே தங்கி விடுவதில்லை இன்பமோ துன்பமோ. இந்தப் பாகத்தில் உணர்வுகள் அதிகமாக தூக்கி எறியப்பட்டுள்ளது முகம் சுழிக்கும் அளவிற்கு. தொடர்ந்து வாசியுங்கள். "கொடுமையிலும் மடமையோடு நம்மைநம்பி நாடி வந்தோரை இகழ்ந்து இரை தேடுவது நியாமற்ற செயல்" தன்னுடன் இருப்போரை இகழ்ந்து! மனதில் சலனத்தோடு பிறர் வாழ்க்கையையும் அழிக்க ஏங்கி வாழ்வோரும் இங்கே வாழத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையைத் தான் மலையன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். முந்தையப் பகுதியில் தன் மனைவி பரிமளத்துடன் சண்டையிட்டவன் தோட்டத்திற்கு போய்ட்டான். கட்டாந்தரையில அவன் மவன் படுத்துக் கெடந்தான். போவதற்கு முன்ன கள்ளப்பய மவளேனு சொல்லிட்டு நடந்தான் அல்லவா. இதெப்படியோ பரிமளத்தின் காதுல விழ. அவ "அப்பன் பேரே தெரியாதவன முண்டச்சி சொல்லி கட்டிகிட்டேன் பாரு" என்ன தொடப்பத்தால அடி...