முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மந்திரப்புன்னகை


மந்திரப்புன்னகை 




காலம் மாறிப்போனது
காதல் என்னுள் வந்துபோனது,

உன் நாணம் எனை ஏதோ செய்தது,
இரவை நீட்டி இமை வருத்தி
கனவு தொலைத்து காலம் கரைந்தேன்,

என் கண்ணீர்த் துளியின் நினைவும் நீதானே
அதன் காரணம் உன் இமைதானே,

நிழல்போலே நானும் நீரன்றி உன்னுடன் வாழ்ந்தேனே,

காலம் ஒருநாள் மாறும்
நாம் கண்ட கனவு நேரும்,

ஜாதி மத இனமொழி ஓலமில்லா நாளை என்னி நாமும் நகர்ந்து செல்வோம் வானிலே,

விதியை மாற்றும் வழிகண்டு பறந்து செல்வோம் நாமும்,

தவறேதும் செய்யாமல் காலம் செய்த தவறுக்கு நம் காதல் பலியேனோ,

பெண்ணே உன் நினைவும் ஞாபகமும் எனதுயிரின் அடிநாதமே.

பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...