வெண்பா 10. பனங்காய் பணியாரம் வணக்கம் தோழமைகளே. இந்த வாரத்திற்கான பகுதியை எழுத முனையும் போதே இதழில் எச்சி ஊறுகிறது "பிரியாணியின்" மணம் ஏங்கி. பிரியாணியை பரிசாக கொடுக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு "இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்" . "உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார்" - திருக்குறள். மது, மாது எனச்சுற்றி அழையும் சிங்கம் எப்போதும் சிதைந்து பிறர் மதிக்கப்படாமல் போகும். தொடர்ந்து வாசியுங்கள் எனது வெண்பாவை. நிறைய மனித மிருகங்களின் கொடுங்கோல் மனது பற்றிய கதை இது. கையில அந்த கூர்முனையான தேங்கா உறிக்கும் இரும்பு கம்பி ஏந்திய அஞ்சு நிமிசத்திலயே மலையன் மயங்கிட்டான். அவனுக்கு "சரசு" தான் நம்ம மழையில நனையுறப்ப ரோட்டோரமா பார்த்த பொண்ணுனு மட்டுமே நியாபகம் இருந்துச்சு. அவன் மயங்குறப்ப அவ அந்த துணி அப்பறம் ஒரு கப்புல கொஞ்ச தண்ணீ எடுத்துட்டு வேகமா ஓடியாந்தா. இவன் பக்கத்துல வந்த ஒடனே அத பக்கத்துல இருக்கவங்க கிட்ட கொடுத்துட்டா. கூட்டத்துல இருந்த ஒருத்தன் தான் அவனோட கைய நல்லா தண்ணீ வச்சு தொடச்சி துணிய வச்சு லேசா கட்...