முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடைய இடுகை

நாவல் - வெண்பா - 11. கலவியுணர்வு

சமீபத்திய இடுகைகள்

நாவல் - வெண்பா - 10. பனங்காய் பணியாரம்

வெண்பா 10. பனங்காய் பணியாரம் வணக்கம் தோழமைகளே. இந்த வாரத்திற்கான பகுதியை எழுத முனையும் போதே இதழில் எச்சி ஊறுகிறது "பிரியாணியின்" மணம் ஏங்கி. பிரியாணியை பரிசாக கொடுக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு "இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்" . "உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார்" - திருக்குறள். மது, மாது எனச்சுற்றி அழையும் சிங்கம் எப்போதும் சிதைந்து பிறர் மதிக்கப்படாமல் போகும். தொடர்ந்து வாசியுங்கள் எனது வெண்பாவை. நிறைய மனித மிருகங்களின் கொடுங்கோல் மனது பற்றிய கதை இது. கையில அந்த கூர்முனையான தேங்கா உறிக்கும் இரும்பு கம்பி ஏந்திய அஞ்சு நிமிசத்திலயே மலையன் மயங்கிட்டான். அவனுக்கு "சரசு" தான் நம்ம மழையில நனையுறப்ப ரோட்டோரமா பார்த்த பொண்ணுனு மட்டுமே நியாபகம் இருந்துச்சு. அவன் மயங்குறப்ப அவ அந்த துணி அப்பறம் ஒரு கப்புல கொஞ்ச தண்ணீ எடுத்துட்டு வேகமா ஓடியாந்தா. இவன் பக்கத்துல வந்த ஒடனே அத பக்கத்துல இருக்கவங்க கிட்ட கொடுத்துட்டா. கூட்டத்துல இருந்த ஒருத்தன் தான் அவனோட கைய நல்லா தண்ணீ வச்சு தொடச்சி துணிய வச்சு லேசா கட்...

பனிக்குருவி

பனிக்குருவி அதொரு அகன்ற பாலைவனம், செந்நிறக் கம்பலைப் போர்த்தி கடலென பறந்து விரிந்திருந்தது, அங்வொரு பனைப்பெண் தனிக்காட்டு ராணியாக இமயம் அளவு வளர்ந்து, வனத்திற்கே தன்தோகை போன்ற கருக்கவோலையினால் வளிவீசிய பொற்காலம், பனைப்பெண்ணின் கருக்வோலைகளுக்கு இடையே சுள்ளிகளால் இரும்பென ஒரு கூம்புக்கூடு, கூட்டுக்குள்ளே வாழும் பனிக்குருவி, பனை ஓலையின் இசையை ரசித்து ஆனந்தமாக, தானும் மயிலாடிய பனிக்குருவி, பனை ஆகாரத்தையுண்டு ஆரோக்யமாக, ஓலையை விசிறியாக, மட்டைகளை பஞ்சு மெத்தையாக, பனையின் மகனாகவே தவழ்ந்தது முதலே வாழ்ந்து வந்தது, பருவங்கள் மாறி கடுங்குளிரில் அடங்க மறுக்கும் ஓலைகள், குளிர் காற்றுடன் அரக்கியாக சுழிக்காற்றாக மாறி ஒயிலாடியது, நிலைகள் மாறவே தன் மகனின் கண்ணீர் உணர்ந்து மழையாகவே பொழிந்தது பனை, பொழிந்த மழை நெருப்பென குளிருடன் சுட, உறவுகள் பிரிந்து உணர்வுகள் வென்றது, கூட்டைவிட்டு பொந்துக்குள் புகுந்த பனைக்குருவி, வதங்கி வாடி உயிர் குடிக்கும் எமனின் வலையில் சிக்கியது, இருளின் கூண்டுக்குள் சுவாசமில்லாமல் வீழ்ந்த நிலையில் இருக்க, இரைதேடி வந்த பெண்பு...

நாவல் - வெண்பா - 9. சாரட்டு வண்டி

வெண்பா 9. சாரட்டு வண்டி வணக்கம் வாசக நெஞ்சங்களே. முந்தைய அத்தியாயம் "வண்ணான் மலையை" சூடாக பிறர் மனம் சுடும் நெருப்பு போலே முடிக்கவில்லை என்ற ஏக்கம் என்னுள் உண்டு. அந்த வருதத்தை இந்த அத்தியாயத்தில் அழுத்தமாக பதிய விரும்புகிறேன். படித்து அழுதத்தை உணர்ந்து கருத்திட வேண்டுகிறேன். இமைமூடி உறங்க இரவு தேவைப்படா விட்டாலும், இதயத்தில் வலியில்லா இன்பம் இமயமென பொங்க வேண்டும். அதுபோலவே நாம் வாழ்ந்த வாழ்க்கை பிறரின் மனதில் பதிந்து நாம் பயணிக்கும் இறுதிப் பல்லாக்கு இன்பங்களை சுமந்து செல்லவேண்டும். ஆனால் மலையாண்டியின் பல்லாக்கு இன்பமாக சென்றது என்று என் நாயகர்கள் கதையை சுமந்துசென்று ஒருபோதும் சொல்லமாட்டார்கள். வாருங்கள் வயல்வெளி கொஞ்சும் புல்லின் மீது பனித்துளி கொண்ட மோகம் காமத்தின் கதை களத்தில் நீங்களும் வாள்வீசும் வீரனாக. முந்தய பகுதியில் மழவிட்டு நகரத்தொடங்கிய தயிர்காரியின் பின்னயே நடந்து தன் கழுதயையும் பிடிச்சுட்டே போனான் மலையன்(அவன அப்படித்தான் எல்லாரும் அழைப்பர்). கழுதயும் "க க க" என கத்திக்கொண்டே நடக்க. கழுத சத்தத்த கேட்டு முன்ன போற அவளும் பின்ன பாத்திட்டே போன...

எரிமலை வெடிப்பு

எரிமலை வெடிப்பு ஏற்பிடித்து உழும் கலப்பையாக, ஏக்கம் இல்லா ஏற்றத்தில் பண்புடன் வாழ, களத்துமேட்டில் களையெடுக்க, வியர்வை மழையில் நனைந்து இளைப்பாற, ஆதிமனிதனின் நிர்வாண உலகத்தில் உலவும் செம்பருந்தாக, பட்டாம்பூச்சியின் சிறகுபிடித்து பறக்கும் விண்மீனாக, தாரமாக தாவணிப் பெண்ணை மணக்கும் மணாளனாக, கட்டாந்தரையில் நிலவை கட்டியணைக்கும் கதிரவனாக, மரங்களின் நிழலில் மரணிக்கும் இலையாக, பனிமலையை முத்தமிடும் நெருப்பாக, ஸ்டெர்லைட் உலையில் உறங்கும் காப்பராக, கேணி நீரில் நீந்திக் கழிக்கும் குவளையாக, காசு பணம் செறிந்த உலகத்தில் அன்பு செலுத்த ஏங்கி மண்ணில் அழும் சிசுவாக, ஆண்ட்ராயிடும் ஆண்ட்டி ரைடும் இல்லா வாழ்க்கை வாழ ஏங்கும் தந்தியாக, மழலையின் இதழில் துளிர்ந்த புன்னகையை உணர்ந்து தவழும் அன்னமாக, 👉ஆசைகள் அழிந்து இதயத்தில் ஏக்கங்களாக எரிமலை வெடித்துச் சிதறும் நாள் வெகு தொலைவில் இல்லை..!! பூவிதழாக, தமிழினியன்

காத்திருப்பு

காத்திருப்பு நினைத்தே காத்திருந்தேன், நெடுதூரம் போயிருந்தேன், நாடி நரம்பு துடிக்க நான் நாளும் உன்னையே எண்ணினேன், வீதி மாறினாலும் விதி மாறுவதில்லை, விதியாக நீ என் விரலுக்குள் மோதிரமாக இருந்தால், விதிகூட வழிமாறும், கவிபாடி கலைத்துப் போய் ஏங்க கனவிலே நீயும், அதன் நினைவாக நானும், ஏக்கத்தினால் களைப்புற்ற என் இதயமும், தேடிச்சென்ற பாதை நீ சென்ற பாதை, எங்கே எனத் தேடுவேன் உன்னை, கனவிலே வரும் தேவதைகளைத் தேடவேண்டும் என்றால், இங்கே ஒவ்வொரு வரும் மரணித்துப் போவார்கள் காணும் தேவதைகளால் இதயமும் உயிரும் களவாடப்பட்டு. பூவிதழாக, கொண்டல்

உழபடை

உழபடை   விதைத்த விதையை உயிராக எண்ணியே வறண்ட பயிர்களும் வாடுகையில், பூமி பார்த்த வானம் இன்று நாணம் மறந்ததே, விதைத்த விரல்கள் கூனி நிற்கையில் மனம் ஏனோ ஏங்கி நிற்க, கண்களில் பொழியும் வெந்நீரால் பயிர் செழிக்கும் என்ற ஏக்கத்தில் நான் மருக, மருகும் என் உயிரே மறித்துப் போனதே, உயிர் வீழ்ந்தாலும் உள்ளம் வாடி வறண்ட பயிர்களை நாடியே நிற்கிறது, எங்கே என் வருங்காலம் ஊண் அல்லாமல் வான் பார்க்குமோ என்று, காகிதமே சுழலில் கரைசேரும் போது இருளில் மறித்த பறவையாகிறோமே நாங்கள்! பூவிதழாக, தமிழினியன்