நீ மட்டுமே
அழகு நிழலாக எனைத் தொடர்ந்தாயடி,
மழலை மொழியாக பொழிந்தாயடி,
நினைக் கண்டு நாழி நோக்கவே,
செங்கதிரும் மேற்குச் சாய்ந்தனவே,
நின் நகையொலியின் மனவலியால் சமுத்திர ராஜனும் சீறிப்பாயவே,
சிந்தனை இழந்து உனது பார்வையில் சிலையானேனே,
சுற்றம் மறந்து உன் முகமதியால் என்மதி மறந்தேனே,
வளியால் அசையும் உன் கூந்தலும் என் காதில் சல்லாபிக்கின்றதே,
நின் காற்சிலம்புகள் கவிபாடவே
என் கால்களும் தாண்டவமாடுதே,
என் கால்களும் தாண்டவமாடுதே,
நின்னைச் சரணடைய நான் ஏங்கவே,
நீ மட்டும் எனைப் பிரிந்து எங்கே சென்றாயடி,
என் கண்மணியே கவிமணியே.
பூவிதழாக,
தமிழினியன்
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக