வெண்பா 7. மருத்துவரும் கார்மேகமும் நம்மை நாம் எவ்வளவு தான் பாதுகாத்து கொண்டாலும் நம்மைச்சுற்றி இருக்கும் மிருகங்களின் பசி நம்மைக் கொல்லும் ஆயுதமாக இருக்கலாம். இல்லையென்றால் அவர்களின் பசியாக கூட நாமே இருக்கலாம். இதையேதும் எல்லா நேரங்களிலும் நம் மனம் உணர்வதில்லை. பசிக்காக உண்ணும் மிருகங்கள் ஏராளம். அப்படி பசிக்காக அரசி கற்பழிக்கப்பட்டாளா. இல்லை எதற்காக கற்பழிக்கப்பட்டாள். ஏன் சோலையன் மனநலம் பாதிக்கப்பட்டு தன்னிலை உணராமல் இருக்கிறார் என அறிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள். வாழ்க்கையில் வாசிப்பு நம்மை மேன்மைப்படுத்தும் . சரி வாங்க கதைக்குள்ளே போவோம். பீங்கானை எடுத்துக்கொண்ட கான்ஸ்டபிளும் இன்ஸ்பெக்டரும் அந்த பீங்கானில் இருக்கும் ரத்த மாதிரியை உடனே கண்டுபுடிக்க வேண்டும் என்று அங்கிருந்து புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். அங்கிருந்து கிளம்பிய அவர்கள் தங்களுக்குள்ளே பின்வருமாறு பேசிக்கொண்டனர். கான்ஸ்டபிள் நம்மகிட்ட இருக்கும் இரண்டு க்ளூ. ஒன்று அவள் ஆடையில் பட்டிருந்த ரத்த மாதிரி, இன்னொன்னு இந்த பீங்கானில் இருக்கும் ரத்தமாதிரி. இதுரெண்ட...