முள்மேல் பனித்துளி
உலக சிறப்பின் சிற்பம் அவள்,
பவனி வரும் தேர்
பார் புகழ்பட வேண்டிய ஒளி அவள்,
இன்பத்தின் பெருமை
இதழ் விரித்த தாமரை அவள்,
கலையாத மேகம்
கண் சிமிட்டும் பொம்மை அவள்,
சிறைப்பட்ட பூனை
கனவு தொலைத்த காவியம் அவள்,
சினம் இல்லா சிங்கம்
சிலரின் இச்சைகளால் சிதைபடுவது ஏனோ,
சுதந்திரம் இல்ல சூழலில் வாழும் அவளுக்கு,
உரிமையும் உணர்வுகளும் இழந்த அவளுக்கு,
காலம் மாறிப்போகும் வேளையில் மேகங்கள் கூட விடியலை நோக்கி நகர்கிறது,
அவள் மட்டும் கருவறைக்குள் வாழும் ஒளியொலி இல்லா ஊமையாகிறாள்.

கருத்துகள்
கருத்துரையிடுக