முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தடுமாறும் ஊஞ்சல்

தடுமாறும் ஊஞ்சல்



யாருக்காக அழுதேன்
எதற்காக அழுகிறேன்,

ஏது நினைந்து என் விளி சிவந்தன,

எது என் வாழ்க்கையின் பயணம்,

ஏன் இந்த சுயநல உலகில்
அவதரித்தேன்,

ஏன் உலகம் சுருங்கி சுழல்கிறது,

ஏன் நாடகமாடும் மனிதர்களின் பிடியில் இல்லாமல் இருக்கிறேன்,

எது என் வாழ்க்கையில் வளம் தருபவை,

நான் செல்லும் வழிகள் யாவும் ஏன் இருள் சூழ்ந்து
இருக்கின்றன,

தன்னம்பிக்கை எனும் கடலில் நீந்தும் எனக்கு ஏன் இந்த தடுமாற்றம்,

வானம் போன்ற என் வெண்மனதில் ஏன் சிறுமை,

நாளும் நலம்வாழ ஏங்கி இன்வாழ்வு தொலைத்தேனோ,

செருக்கினால் இதயத்தில் எழுந்த நெருப்பை அனைத்து எழுந்து ஓடினான் அந்தச் சிறுவன்?

எங்கே..? எங்கே..? எங்கே..?

பள்ளிக்கு...!!

தங்கை அனிதாவிற்கும், தம்பி கெவினுக்கும் அர்பணிக்கிறேன்.

கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...