முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உழபடை

உழபடை 


விதைத்த விதையை
உயிராக எண்ணியே
வறண்ட பயிர்களும்
வாடுகையில்,
பூமி பார்த்த வானம்
இன்று நாணம் மறந்ததே,
விதைத்த விரல்கள் கூனி நிற்கையில் மனம் ஏனோ
ஏங்கி நிற்க,
கண்களில் பொழியும்
வெந்நீரால் பயிர்
செழிக்கும் என்ற ஏக்கத்தில்
நான் மருக,
மருகும் என் உயிரே மறித்துப் போனதே,
உயிர் வீழ்ந்தாலும் உள்ளம்
வாடி வறண்ட பயிர்களை
நாடியே நிற்கிறது,
எங்கே என் வருங்காலம்
ஊண் அல்லாமல்
வான் பார்க்குமோ என்று,
காகிதமே சுழலில் கரைசேரும் போது
இருளில் மறித்த பறவையாகிறோமே நாங்கள்!

பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...