உழபடை
விதைத்த விதையை
உயிராக எண்ணியே
வறண்ட பயிர்களும்
வாடுகையில்,
பூமி பார்த்த வானம்
இன்று நாணம் மறந்ததே,
விதைத்த விரல்கள் கூனி நிற்கையில் மனம் ஏனோ
ஏங்கி நிற்க,
கண்களில் பொழியும்
வெந்நீரால் பயிர்
செழிக்கும் என்ற ஏக்கத்தில்
நான் மருக,
மருகும் என் உயிரே மறித்துப் போனதே,
உயிர் வீழ்ந்தாலும் உள்ளம்
வாடி வறண்ட பயிர்களை
நாடியே நிற்கிறது,
எங்கே என் வருங்காலம்
ஊண் அல்லாமல்
வான் பார்க்குமோ என்று,
காகிதமே சுழலில் கரைசேரும் போது
இருளில் மறித்த பறவையாகிறோமே நாங்கள்!
பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக