முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எரிமலை வெடிப்பு

எரிமலை வெடிப்பு


ஏற்பிடித்து உழும் கலப்பையாக,
ஏக்கம் இல்லா ஏற்றத்தில்
பண்புடன் வாழ,

களத்துமேட்டில் களையெடுக்க,
வியர்வை மழையில் நனைந்து இளைப்பாற,

ஆதிமனிதனின் நிர்வாண உலகத்தில்
உலவும் செம்பருந்தாக,

பட்டாம்பூச்சியின் சிறகுபிடித்து
பறக்கும் விண்மீனாக,

தாரமாக தாவணிப் பெண்ணை
மணக்கும் மணாளனாக,

கட்டாந்தரையில் நிலவை
கட்டியணைக்கும் கதிரவனாக,

மரங்களின் நிழலில் மரணிக்கும் இலையாக,

பனிமலையை முத்தமிடும் நெருப்பாக,

ஸ்டெர்லைட் உலையில் உறங்கும் காப்பராக,

கேணி நீரில் நீந்திக் கழிக்கும் குவளையாக,

காசு பணம் செறிந்த உலகத்தில் அன்பு செலுத்த
ஏங்கி மண்ணில் அழும் சிசுவாக,

ஆண்ட்ராயிடும் ஆண்ட்டி ரைடும் இல்லா வாழ்க்கை வாழ ஏங்கும் தந்தியாக,

மழலையின் இதழில் துளிர்ந்த புன்னகையை
உணர்ந்து தவழும் அன்னமாக,


👉ஆசைகள் அழிந்து இதயத்தில் ஏக்கங்களாக எரிமலை
வெடித்துச் சிதறும் நாள் வெகு தொலைவில் இல்லை..!!

பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...