முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புகையும் மனம்

புகையும் மனம்


எண்ணித் தவித்த நாட்கள் ஆயிரம்,
ஏற்றம் என நினைத்து நாம் வீழ்ந்த நாட்கள் ஓர் யுகம்,
சுகம் என சுமைகள் நம்மேல் ஏறும் அளவின் அறிவினம்,
காதல் என நாம் கறைந்து போகும் கண்ணீர் செலவினம்,
ஏக்கம் என நம்மேல் தாக்கம் கொள்ளும் நினைவுகள் ஒருவிதம்,
இன்பத்தை அனுபவிக்கும் உள்ளம்
உருகும் நினைவுகளின் கனம்,
புன்னகையில் புரிந்துணர்ந்து புதைந்த நாட்கள் ஏராளம்,
பொழியும் மழையில் நனைய நினைந்த நாட்கள் வரம்,
நா வரண்டு நாதியற்று நாடிநின்ற நாட்கள் சாபம்,
துக்கமே தூக்கம் என விழி நினைத்து விட்டதோ என்னவோ,
பூக்களைப் பறித்து என் மீது தூவுகின்றனர்,
நான் செல்லும் பாதையிலா?
இல்லை செவி சாயத்த பாதையிலா,
அறியாத மனமே ஆயிரம் தேடலைத் தேடும் கபோதி.

பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...