காத்திருப்பு
நெடுதூரம் போயிருந்தேன்,
நாடி நரம்பு துடிக்க நான் நாளும் உன்னையே எண்ணினேன்,
வீதி மாறினாலும் விதி மாறுவதில்லை,
விதியாக நீ என் விரலுக்குள் மோதிரமாக இருந்தால்,
விதிகூட வழிமாறும்,
கவிபாடி கலைத்துப் போய் ஏங்க கனவிலே நீயும்,
அதன் நினைவாக நானும்,
ஏக்கத்தினால் களைப்புற்ற என் இதயமும்,
தேடிச்சென்ற பாதை நீ சென்ற பாதை,
எங்கே எனத் தேடுவேன் உன்னை,
கனவிலே வரும் தேவதைகளைத் தேடவேண்டும் என்றால்,
இங்கே ஒவ்வொரு வரும் மரணித்துப் போவார்கள் காணும் தேவதைகளால் இதயமும் உயிரும் களவாடப்பட்டு.
பூவிதழாக,
கொண்டல்

கருத்துகள்
கருத்துரையிடுக