முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீ இதழ்

தீ இதழ்


உன்னையே நினைத்து
இதழ்கள் ஏங்க,
ஏங்கிய நொடி
மறந்தேன்,
மறந்த நொடியில்
தொலைந்து போனேன்,
தொலைந்த நொடியைத்
தேடவே,
தேடிய பொழுதில் மனமும் கனமாக வாட,
வாடிய பொழுதில் இதயமும் வீழ்ந்தது,
வீழ்ந்த வேகத்தில் விழி
நோக்கவே,
நோக்கிய பொழுது
அவள் பிறந்த
பொழுது,
கண்கள் கசிய இதயம் காதலில் ஏங்க,
நான் வீழவா எழவா!!!

வீழ்ந்தால் என் வாழ்வு
சொர்க்கம்,

எழுந்தால் அவளுடன் வாழும்
நரகம்!!!

அன்புள்ளோருடன் நாம் வாழும் வாழ்க்கை நரகம் என்றாலும் ஆனந்தமே!!

#நரகத்தில்_நான்

பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...