அன்றில் பறவை
ஏதேதோ ஆனதே
என்னுள்ளே மின்னல் மோதுதே,
காற்றைப் போல உன்னையே
கவர்ந்துவர எண்ணியே,
உன்னிடம் என்னையே எப்போது தொலைத்தேனோ,
தேடித் தேடியே தேவதை உன்னைக்கண்டு,
நாளும் உன்னையே ஏங்கும் எண்ணத்தை என்னுள் எப்படி
விதைத்தாயோ,
வாடி என நானும் சொல்ல
வார்த்தை என்னுள் வந்ததில்லை,
போடி என்று நானும் சொல்ல
பொழுதுபோக்க யாருமில்லை,
பொழுதுகள் சரியும் மாலை வேளையில்
மனம் ஏங்கும்போது மல்லிகை நீ இல்லையே,
விடிந்த காலைகளும் இருள் சூழ்ந்த நெருப்பாக
எனைச் சுடுதே நீ இல்லாமல்.

கருத்துகள்
கருத்துரையிடுக