முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

About Me

தமிழினியன் 


பொறியியல் படித்து முடித்து, வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எழுத்தின் மீது ஓர் அலாதிப் பிரியம்.

ஒரு கூடைக்குள் ஒழிந்து கொள்ளும் கோழியாகவும்,
இருள் சூழ்ந்த குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டவும்,
யாரோ ஒருவருக்கு உழைத்துக் கொடுத்து ஊதியம் வாங்கி நாடகமாடவும்,
அவர் என்ன சொல்லுவார் இவர் என்ன சொல்லுவார் என உமிழ்நீர் உள்ளத்தில் பட்டாலும் சிரித்துக் கொண்டு விழிக்காமல் வாழவும்.
பிடித்ததை செய்ய வெறுத்தும்,
நீ நீயல்லாமல் எவனோ ஒருவனுக்கு விலை போகும் மது/மாதுவாக இருந்து என்ன பயன் என உணர்ந்ததால்,
நெடுங்காலம் வாழ்வில் எந்தவொரு முயற்சியையும் என் மனம் நினைத்த ஒரு புள்ளியில் என் பயணத்தை செலுத்தவில்லை.

அது நினைந்து மனம் வலித்து முதல் முயற்சியாய் ஒரு சிறு ப்ளாக் தொடங்கி எனது எழுத்துப் பயணத்தை தொடங்குகிறேன்.

பிடித்தால் பின்தொடரவும், பிடிக்கவில்லையா காரி துப்பு.
திருத்திக் கொள்வேன்.

Twitter : https://twitter.com/itamiliniyan
instagram : https://www.instagram.com/itamiliniyan/

பூவிதழாக,
தமிழினியன் 

கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...